Tuesday, October 5, 2010

அகப்படல்

கண்ணாடி பார்த்து
முகம் கொத்தும்
நீள் அலகு
பறவையொன்று
வான் விட்டு
கீழ் இறங்கி
என் தோள்
அமர்ந்தது
இன்று காலை

தன் முகம்
கொத்தி
என் முகம்
செதுக்க
சிறகை விரித்து
விட்டு விடுதலையாய்
நீ போவென
மேல் நோக்கி வீச

என் அகமும் முகமும்
பெற்ற பறவை
வான் சிறைப்பட்டது
தான் வேறு வான் வேறு
என்றுணர்ந்தபோதே

No comments: