Monday, October 18, 2010

ஜன்னலுக்கு வெளியே

புரட்டாசி மாத மழை பெய்து ஓய்ந்துவிட்டிருக்கிறது

நடுப்பகலிலிலும்
வேப்பமர உச்சிக் கொழுந்துகளில்
தேங்கிய சிறு துளிகளின் மேல்
பறக்கும் ரச்மிகள்

வாசலில் கொத்து பரோட்டா சப்தம்

பெருமாள் கோவிலிலிருந்து
திரும்பிவிட்டனர் பலர்

மச்சு வீடுகளில் யாரும் எழுந்திருக்கவில்லை

மச்சு வீடுகளில் யாரோ இருக்கிறார்கள்
மாலை மயங்கிய பிறகே அங்கே யாரோ வருகிறார்கள்
இசையும் குடியுமாக கழிக்கிறார்கள்

நாளுக்கொரு ஏக்கத்தின் புகை வளையமாய்
இருபத்தியேழு விட்டாயிற்று
மச்சு வீடுகளை நோக்கி

அசைந்து கொடுப்பதில்லை
மச்சு வீடுகள்
என் ஜன்னலுக்கு சற்றே வெளியேதான்
இருக்கின்றன அவை

மச்சு வீடுகளில் யாரோ இருக்கிறார்கள்
தனிமையை அழிக்கத் தெரிந்தவர்கள்

No comments: