Saturday, October 2, 2010

இரு நாகங்கள்

கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கு என்னை அடையாளம்
தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது

கணங்கள் அவிழ அவிழ
நானென்று ஒன்று
உருவாகிக் கரையக் கரைய

நாகங்கள் சீறி சீறி
காம உக்கிரத்தில்
மேலெழும்பி
வால் நுனி நின்று
பின்னிப் பிணைந்து
பிளவுண்ட நாக்குகளால்
ஒன்றோடொன்று துழாவி
கண்ணாடிக்கண்களில்
வைர ஒளி வீசி
வழுக்கு உடல்களின்
அம்மணம் காட்டி நிற்க

ஒரு நாகம்
நழுவும் கணமெனில்
மறு நாகம்
நானென்பதாக

No comments: