Tuesday, October 26, 2010

மனநோய் குறித்த ஓர் நேர்காணல்

இயக்கமின்மையில் உறைந்திருந்தது 
பற்றிய தோத்திரப்பா 
என்றும் சொல்லாம் இதை
நீ உன் பாரசீக 
திராட்சை ரசத்தை 
குடித்து முடித்து
வரும் வரை 
சொல்லாமலிருக்கலாகாது
உன் போதையும் 
நானுடைந்த தருணமும்
தளை ஓசை தட்ட இணைவது
அகாலத்தின் விதியென்றால் 
நம் சந்திப்பு
நிகழ்வதும் அ-வெளியில்
என்று கொள்
ஆனாலும் புகைப்படத்திற்கு 
அனுமதியில்லை
நான் ஆடைஅவிழ்க்க
முழுமையாய் விரும்பியும்
பாரிசத்தால் கட்டுண்ட கைகளோடு
கருவிழிகளில் உன்மத்த விரகம் உப்பி நிற்க
நீ கூந்தல் விரித்தாய் முதலில்
பிருஷ்டம் சிலுப்பி நின்றாய் பின்பு
பெயர்தெரியா சிறு பறவைகள் 
வானம் நிறைத்து
உன் நக நுனி போன்ற அலகுகளால் 
என் தோலெங்கும் வருட
சிலிர்த்தும் செயலின்மையில்
நான் நிற்க
உவகையுடன் அம்மணங்காட்டுகிறாய்
என் பாலுறுப்பு என் தலையில்
என் மொழியில்
என்றறிந்திருந்தும்
ஒரு சொல் காதல் வாராது
எங்கிருந்தும்
என்பதாக நம் நேர்காணல்
பிரசுரத்திற்குதவாது எனினும்
நோய்க்காகும்

No comments: