Monday, October 4, 2010

சொப்பனக் குமிழ்

சொப்பனக் குமிழொன்று
வெளி மனத்தின்
நீர்ப்பரப்பு
விட்டகன்று

விடுதலின்
உந்திசையால்
மேலெழுந்து

ஒளிவாங்கி
ஒளிவாங்கி
வான வில்லின் நிறங்கள் காட்டி
ஊடும் கதிர்கள் உள்ளிழுத்து
கவியுலகு பல காட்டி விகசிக்க

திசையறியா
பறத்தலென
விண்ணேகிக்
கொண்டாட

கீழீர்க்கும்
தீ உறவின்
மென்மோதலால்
சிதறி வெடித்து
இரண்டறக்
கலந்தது
நனவின் திவலையாய்

No comments: