Tuesday, November 22, 2011

கெக்கெலி





வா போகலாமென
பிளவுண்ட நாக்கொன்று
அநாமதேயக் கைபோலவே
மெள்ள நீட்டுகிறது
தெற்குத் திட்டிவாசல்
திறவுகோலை
பெயரற்ற பறவைகளின்
ரெக்கையொலியெனவே
கோபுரம் நிறைக்கின்றன
திடீர் கெக்கெலிகள்
கோல் பற்றி
துளை பொருத்தி
வாயில் திறக்க
மூடிய ஒற்றை இமை
வெட்டிய மின்னலென
வெடித்து விழிக்க
எங்கும் நிறைகிறது
துணுக்காய் சிதறிய
கெக்கெலி முகக்
கண்ணாடிகள்

No comments: