Monday, November 14, 2011

பதினாறு





காற்றற்ற காலையில் கூரையில் தொங்கும் மழைத்துளி
புல்வெளியில் மேயும் வெள்ளைக் குதிரைகள்
தெருவில் தோழி
வானில் நாரைகள்
மாடத்தில் புறா

உதிரும் நாகலிங்கப் பூ
வெடித்த வேர் பலா
துள்ளி ஓடும் அணில்

தூரத்தில் சங்கொலி
யாரோ சப்பு கொட்டுகிறார்கள்
மேஜையிலிருந்து விழும் கரண்டி
சிதறும் கண்ணாடி
சீறும் பூனை

மூடாத புத்தகம்
முடியாத கவிதை

என்றும் பதினாறாய் தரையில் உன் உடல்




1 comment:

Anonymous said...

Beautiful and mystical- Raghav