Tuesday, November 22, 2011

கற்பிதம் பாதியில் நின்றுவிட்டபோது





அது எப்போது வரும் என்று தெரியாது
வரும்போது அறிவித்தல் இருக்காது
வருவதற்கான அறிகுறிகளும்
வராதாதற்கான அறிகுறிகளும்
ஒன்றெனவே பொய்க்கும்
எனினும்

அந்த மிருகத்தின் மின்னும் கண்களை
உற்றுப் பார்த்தவர் எங்கள்
தீர்க்கதரிசிகளாயினர்
காதலைப்போல் என்போர்
எங்கள் கவிஞராயினர்
போரைப்போல் என்போர்
எங்கள் அதிபராயினர்
தவித்திருந்தோர் குடிகளாயினர்
அந்த மிருகத்தைப்
பெயரிடத்தெரியாமல்
கற்பிதம் பாதியில் நின்றுவிட்டபோதுதான்
எல்லாம் உறைந்துவிட்டது
அடிவயிற்று வலியென



No comments: