Sunday, July 8, 2012

இன்னும் சில நாட்கள்


என்னுடைய இந்த வலைத் தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களும் வாசகர்களும் ஏன் நான் முன்பு போல தொடர்ந்து தினசரி எழுதுவதில்லை என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றனர்.

எப்ரல் மாதத்திலிருந்து எனக்கு வேலைப் பளு கடுமையாகிவிட்டது. பத்து எம்ஃபில் படிப்பு மாணவர்கள் புதிதாய் என் மேற்பார்வையில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். வரும் செப்டம்பரில் இன்னும் இருபது எம்ஃபில் மாணவர்கள் சேர இருக்கின்றனர். இவர்கள் இந்தியா முழுவதும் நாட்டுப்புறவியல் ஆராய்ச்சிக்கான களப்பணி மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்த வேலை ஏற்கனவே இருந்த வேலைகளோடு என்னை முழுமையாக ஆக்கிரமித்தபடியால் வலைத் தளத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டியதாயிற்று. இடையில் உடல் நலமும் சரியில்லாமல் இருந்தது. இப்போது உடல் நலம் தேறிவிட்டது.

இன்னும் சில நாட்களில் என் நேரத்தை ஒழுங்கு செய்தபின் மீண்டும் தொடர்கிறேன்.

ஆர்வமாக விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

No comments: