Friday, August 23, 2013

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது என்பது அலாதியான அனுபவம். நியுயார்க்கர் பத்திரிக்கை மாதந்தோறும் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகளை எழுத்தாளர்களைக்கொண்டு வாசிக்க வைத்து podcast ஆக வெளியிடுகிறது. கதைகளைப் பற்றிய சிறிய உரையாடல்கள்,  அறிமுகங்களுக்குப் பிறகு கதைகளை எழுத்தாளர்கள் வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுதப்படும் விதவிதமான சிறுகதைகளைப் பற்றி அறிந்துகொள்ள நியுயார்க்கர் பத்திரிக்கையின் மாதாந்திர சிறுகதை podcast நல்ல வழியாக இருப்பது மட்டுமல்ல சிறுகதைக்கு எத்தனை சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்பதும் உடனடியாகத் தெரிய வருகிறது. காலை நடைப்பயிற்சியின் போது, அலுவலகத்திற்கு பயணம் மேற்கொள்ளும்போது, அறையை ஒழுங்கு பண்ணும்போது, புத்த்கங்களை அடுக்கி வைக்கும்போது, சமைக்கும்போது என பல சந்தர்ப்பங்களில் சிறுகதைகளைக் கேட்கிறேன். இந்தக் கதைகள்தான் என் தினசரி அனுபவத்தையும் பகற்கனவுகளையும் எவ்வளவு வளம் மிக்கதாக மாற்றுகின்றன! கண்களால் சிறுகதைகளை வாசித்துக்கொண்டே அதே வரிகள் வாசிக்கப்படுவதைக் கேட்பது வாசிப்பினை மிகவும் ஆழமானதாகவும், கவனம் மிக்கதாகவும், நுட்பமானதாகவும் மாற்றுவதை நான் உடனடியாக உணர்ந்தேன். அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு?

நியுயார்க்கர் சிறுகதை podcastஐ நீங்கள் http://www.newyorker.com/online/blogs/books/podcast/ என்ற சுட்டியில் கேட்கலாம்.

இந்தக் கதைகளில்

6/4/2013 அன்று ராபர்ட் கூவர் வாசித்த இடாலோ கால்வினோவின் 'The daughters of the moon'

4/2/2013 அன்று மார்கரெட் அட்வுட் வாசித்த மேவிஸ் காலண்ட்டின் ''Voices Lost in snow'

12/4/2012 அனறு ஹிஷாம் மாடர் வாசித்த போர்ஹெசின் 'Shakespeare's memory'

8/19/2011 அன்று சால்மான் ருஷ்டி வாசித்த டொனால்ட் பார்த்தல்மேயின் கதை 'Concerning the bodyguard'

9/21/2011 அன்று பென் மார்கஸ் வாசித்த இஷிகுரோவின் கதை 'A village after dark'

10/15/2010 அன்று டேவிட் மீன்ஸ் வாசித்த ரேமண்ட் கார்வரின் 'Chef's house'

8/12/2010 அன்று கிறிஸ் அட்ரியன் வாசித்த டொனால்ட் பார்த்தல்மேயின் 'Indian uprising'

10/13/2009 அனறு பாமுக் வாசித்த விளாடிமிர் நபகோவின்  சுய சரிதை 'Speak memory' புத்தகத்திலிருந்து 'My Russian education' அத்தியாயம்

4/10/2009 அன்று நாதன் இங்கிலாண்ட் வாசித்த பால்விஷஸ் சிங்கரின் கதை ' Disguised'

ஆகியன எனக்கு மிகவும் பிடித்தவை. நான் இந்தக் கதைகளை- நபகோவின் சுய சரிதை அத்தியாயம் உட்பட- மீண்டும் மீண்டும் கேட்டேன். சிறுகதை என்ற வடிவம்தான் எத்தனை சாத்தியப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது! நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன். தேதிகளையும் இதர விபரங்களையும் நீங்கள் எளிதாகத் தேடிப்பார்ப்பதற்காகத் தந்திருக்கிறேன்.


No comments: