Monday, September 2, 2013

மொழிபெயர்ப்பு நாவல்களுக்கு இலக்கிய உரைகளும் பின்னணித் தகவல்களும்

ஐயா,
என் பெயர் மாணிக்கம். நான் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். திரையுலகத்தில் பலரும் பேசக் கேட்டு 'என் பெயர் சிகப்பு', 'One hundred years of solitude' ஆகிய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்தேன். எனக்கு இந்த நாவல்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறது. மொழிபெயர்ப்பில் கோளாறா எனக்குதான் புரியவில்லையா என்று விளங்கவில்லை. தாங்கள் உதவ முடியுமா?
அன்பு மறவாத
மாணிக்கம்

அன்புள்ள மாணிக்கம்,

"நூறாண்டு தனிமை', 'என் பெயர் சிகப்பு' ஆகிய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் இன்னும் வாசிக்கவில்லை. இந்த நாவல்களை மொழிபெயர்த்த சுகுமாரனும், ஜி.குப்புசாமியும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களாகக் கருதப்படுபவர்கள்.எனவே மொழிபெயர்ப்புகளில் பெரிய கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு என்ன புரியவில்லை என்று சிறிது விளக்கியிருந்தீர்கள் என்றால் உங்கள் சிரமங்கள் என்ன என்று நான் கணித்திருக்க முடியும்.

'நூறாண்டு தனிமை', 'என் பெயர் சிகப்பு' ஆகிய நாவல்களை வெறும் கதைகளாகவே சுவாரஸ்யமாக வாசிக்கலாம் என்றாலும் அந்த நாவல்களுக்கான பின்னணித் தகவல்களை அறிந்திருப்பது நாவல்களை புரிந்துகொள்ள கூடுதலாக உதவக்கூடும். எளிமையான ஆங்கிலத்தில் இந்த நாவல்களுக்கான உரைகளும் பின்னணித்தகவல்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் சுட்டிகளைக் கீழே தந்திருக்கிறேன். அவை உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள்.

http://learner.org/courses/worldlit/my-name-is-red/

http://learner.org/courses/worldlit/one-hundred-years-of-solitude/ 

கூடுதலாக இந்த நாவல்களுக்கான உரைகளையும் கேளுங்கள், பின்னணித் தகவல்களைப் படியுங்கள்

http://learner.org/courses/worldlit/things-fall-apart/

http://learner.org/courses/worldlit/the-god-of-small-things/ 


நீங்கள் உங்கள் பெயரை எழுதாமல் சில மின்னஞ்சல்களையும் எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள். பெயரில்லாமல் வரும் கடிதங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை,

அன்புடன்,
எம்.டி.எம்

No comments: